Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி ; சதுர்த்தி விழா துவக்கம்  Sep 3, 10
 
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், சதுர்த்தி பெருவிழா துவங்கியது. நேற்று காலை கொடி மரத்திற்கு அருகே அங்குச தேவர் ச எழுந்தருளினார். கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. பிறகு, 9.55 மணிக்கு கொடியேற்றப்பட்டது. மாலையில் மூலவர், உற்சவர், பலிபீடம், மூஷிகம், சண்டிகேஸ்வரர், அங்குச தேவருக்கு காப்பு கட்டப்பட்டது. அறங்காவலர்கள் அரு.அருணாசலம், நா.சிதம்பரம் முன்னிலை வகித்தனர். பிச்சை சிவாச்சாரியார், சோமசுந்தர குருக்கள் பூஜைகளை செய்தனர். சொற்பொழிவு, கவியரங்கம் நடந்தது. இரவில் மூஷிக வாகனத்தில்விநாயகர் வலம் வந்தார். பத்து நாள் விழாவில், தினமும் காலையில் சுவாமி புறப்பாடு, இரவில் வீதி உலாவும் நடக்கும்.


source : Dinamalar