Nagaratharonline.com
 
பொன்னமராவதி : பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் அபேஸ்  Aug 29, 10
 
பொன்னமராவதி பூங்குடி வீதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி பகவதி(55). இவர் தனது சொந்த செலவுக்காக நேற்று காலை பொன்னமராவதியில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு சென்று ஒன்றரை லட்சம் பணம் எடுத்துள்ளார். பின்னர் இந்த பணத்தை தோள் பேக்கில் வைத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்தபின் பேக்கில் இருந்த பணத்தை எடுக்க முயன்றபோது பணம் மாயமானதைக்கண்டு திடுக்கிட்டுள்ளார்.


வங்கியிலிருந்து பணம் எடுப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பகவதியை பின்தொடர்ந்து சென்று அவரது தோளில் போட்டிருந்த பேக்கை பிளைடால் கீறி பணத்தை அபேஸ் செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீஸார் விசாரிக்கின்றனர்.

source : Dinamalar