Nagaratharonline.com
 
கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி முதல் ஞாயிறு வழிபாடு  Aug 24, 10
 
கந்தர்வகோட்டை, ஆக. 23: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி முதல் ஞாயிறு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கந்தர்வகோட்டை யாதவர் இளைஞர் மன்றம் சார்பில் பூத்தட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, வானவேடிக்கையுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

கந்தர்வகோட்டை, சுற்றுப் பகுதிகளைச் ú சர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Source : Dinamani 24th Aug, 2010