Nagaratharonline.com
 
ரேஷன் கார்டுதாரர் கவனத்திற்கு  Aug 24, 10
 
காரைக்குடி : குடிமை பொருள் தாசில்தார் முருகேசன் கூறியதாவது: ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய கோருபவர்களுக்கு, உரிய விசாரணைக்கு பின் சான்றிழ் தரப்படும். திருமணம் முடித்தவர்கள் தனி வீட்டில் வசிக்கும்பட்சத்தில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.


ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இது பொருந்தாது. பெயர் திருத்தம் செய்பவர்கள் கல்வி சான்று, நோட்டரி பப்ளிக் அடையாள சான்று சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை கார்டு பெறாதவர்கள், கடைசியாக வசித்த இடத்தில் கார்டு பெறவில்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் கார்டு வழங்கப்படும், என்றார்.


Source: Dinamalar 24th aug, 2010