Nagaratharonline.com
 
தேவகோட்டையில் குரங்கு தொல்லை  Aug 21, 10
 
தேவகோட்டையில் குரங்குகள் தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.


இங்கு சிதம்பரநாதபுரம், கருதாவூரணி, சிலம் பணி அக்ரஹாரம் பகுதிகளில் குரங்குகள் சுற்றி திரிகின்றன. வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை சாப்பிட்டு விடுகின்றன. பொருட்களையும் சேதப்படுத்துகின்றன. கடையில் இந்து பொருட்கள் வாங்கி செல்லும் போது பறித்து சென்று விடுகின்றன. இதுகுறித்து நகராட்சியினரிடம் புகார் கூறியும் பலனில்லை. ஏற்கனவே பன்றி, நாய் தொல்லையால் அவதிப்படும் மக்களுக்கு, குரங்கு தொல்லையும் சேர்ந்து துன்பப்படுத்துகிறது. நகராட்சி, வனத்துறை இணைந்து குரங்குளை பிடிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

source : Dinamalar