Nagaratharonline.com
 
பாகனேரி மகாமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா  Aug 18, 10
 
பாகனேரி மகாமாரியம்மன் கோயில் முளைப்பாரி உத்ஸவம் நடைபெற்றது. கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ,ஆராதனை நடந்தது. எட்டாம் நாளான நேற்று முன்தினம் மின் விளக்கு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பால்குடம், காவடி, கரகம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். மதியம், பூக்குழி இறங்கினர். மாலை முளைப்பாரி உத்ஸவம் நடந்தது. முளைப்பாரி ஊர்வலம் கோயிலில் புறப்பட்டு, புல்வநாயகி அம்மன் கோயில் குளத்தில் கரைக்கப்பட்டது. விழா கமிட்டியினர் ஏற் பாடுகளை செய்தனர்.


source " Dinamalar