Nagaratharonline.com
 
சிவகங்கை இன்ஸ்பெக்டருக்கு ஜனாதிபதி விருது  Aug 15, 10
 
போலீஸ் துறையில் சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருது சிவகங்கை லஞ்ச ஒழிப்புதுறை இன்ஸ் பெக்டர் ஆர். பாண்டியராஜனுக்கு வழங்கப்பட உள்ளது.தமிழக காவல்துறையில் சிறந்து விளங்கிய, அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2001 முதல் 2010ம் ஆண்டு வரை, சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்ஸ் பெக்டராக பணியாற்றி வரும் இவர், பல்வேறு லஞ்ச வழக்குகளை பதிவு செய்து, லஞ்சம் வாங்கியவர்களை கைது செய்துள் ளார். இவரது சிறந்த சேவையை பாராட்டி, இந்திய அரசு, இவருக்கு சிறந்த சேவைக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே 2004ம் ஆண்டு தமிழக அரசின் முதலமைச்சர் விருது பெற்றுள்ளார்.இவ்விருதுக்கான சான்று மற்றும் பரிசு தொகை, இதற்கென நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும்.


source : Dinamalar