Nagaratharonline.com
 
கொப்பனாபட்டியில் இலக்கிய விழா  Aug 15, 10
 
புதுக்கோட்டை, ஆக. 13: பொன்னமராவதி அருகேயுள்ள கொப்பனாபட்டியில் இலக்கிய விழா அண்மையில் நடைபெற்றது.

பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு,அந்த அமைப்பின் தலைவர் மருத்துவர் எம். சின்னப்பா தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப. ராஜேந்திரன், முத்தமிழ்ப் பாசறைச் செயலர் எஸ். முருகேசன், துணைத் தலைவர் நெ. ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தமிழ் இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முத்தமிழ்ப் பாசறையின் புரவலர் சே. செவந்தியப்பன் பரிசளித்தார்.

முன்னதாக புரவலர் வே.மாணிக்கவேலு காமராஜர் உருவப்படத்தை திறந்து வைத்தார். இதில் முத்தமிழ் பாசறை நிர்வாகிகள் அ.தெட்சிணாமூர்த்தி, கி. ரமேசுபாபு, மா. அண்ணாமலை, செ. பாலமுரளி, ப. முருகேசன், ஹசன்முஹம்மது, இளவரசன், ராஜாமுஹம்மது உள்ளிட்டோர் பேசினர்.

முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர் ஆர். வசந்திகிளாரா வரவேற்றார். நிறைவில், தமிழாசிரியை சீதை நன்றி கூறினார்.

source:dinamani