Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் 6 வீடுகள் தீக்கிரை  Aug 15, 10
 
புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்தழிந்தன.

பொன்னமராவதி அருகேயுள்ள வலையபட்டி வலையவளவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒலிமுஹம்மது. இவர் அப்பகுதியில் உள்ள மாடி வீட்டில் வசித்துவந்தார்.

இந்நிலையில், மின் கசிவு காரணமாக அவரது வீடு திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் கீழே இருந்த வீடுகளுக்கும் தீ வேகமாகப் பரவியது.

பொன்னமராவதி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் பெரியதம்பி தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த இடத்துக்குச் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய வீரர்களும் இணைந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.

எனினும், அவர்களால் தீ மேலும் பரவாமல் மட்டுமே கட்டுப்படுத்த முடிந்தது.

விபத்தில் முஹம்மதுஒலி, நாசர்அலி, அப்துல்சலாம், சையதுபீவி, ஷாகுல், ஷேக்தாவுது ஆகிய 6 பேரின் வீடுகள் முழுவதும் எரிந்தழிந்தன.

இவர்களுடைய வீடுகளிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்தழிந்தன.

திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் ராம. சுப்புராம் சனிக்கிழமை அங்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் நிவாரணத் தொகையை வழங்கினார்.

source:Dinamani