Nagaratharonline.com
 
கொத்தமங்கலம் கோயிலில் திருவிளக்கு பூஜை  Aug 8, 10
 
காரைக்குடி அருகே கொத்தமங்கலம் உலகநாயகி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 27-வது ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் குன்றக்குடி கவிஞர் நா.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு திருவிளக்கு வழிபாட்டிóன் நன்மைகள் குறித்துப் பேசினார். ஊர் சேர்வைக்காரர் கவிஞர் உலகப்பன், அடைக்கலம், சாக்கோட்டை ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிஎல்.காந்தி, நாட் டார்கள், நகரத்தார்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சுமார் 150 பெண் கள் திருவிளக்குப் பூஜையில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மன்றத்தலைவி வீர.உமையாள்ஆச்சி, லெட்சுமி நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.


source ": Dinamani