Nagaratharonline.com
 
வைரவன்பட்டியில் மகா உத்ஸவம்  Aug 6, 10
 
என்.வைரவன்பட்டி, வளர் ஒளிநாதர் வயிரவசுவாமி கோயிலில், மகா உத்ஸவம் துவங்கியது.முதன் முறையாக, இங்கு 10 நாள் விழாவாக நடக்கிறது. கீழச்சிவல்பட்டி சி.டி.எஸ். சிதம்பரம் செட்டியார் குடும்பத்தினர், புது தேரை உபயமாக அளித்துள்ளனர்.நேற்று காலை 10.10 மணிக்கு, தேருக்கு முகூர்த் தக்கால் ஊன்றப்பட்டது.இன்று இரவு கைலாச வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கும். நாளை காலை 9 மணிக்கு, தேர் வெள்ளோட்டம் விடப்படுகிறது. வரும் 12 ம் தேதி மாலை 5 மணிக்கு, தேரோட்டம் நடக்கும். நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க தலைவர் சிதம்பரம், துணை தலைவர் லட்சுமணன் செட்டியார், இணை செயலாளர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன், செயலாளர், பொருளாளர் ஏற்பாடுகளை செய்கின்றனர்


source : Dinamalar