Nagaratharonline.com
 
திருப்பரங்குன்றத்துக்கு நகரத்தார் பாதயாத்திரை  Aug 2, 10
 
தேவகோட்டையிலிருóந்து திருப்பரங்குன்றம் நோக்கிச் செல்லும் நகரத்தார் பாதயாத்திரை குழு ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை வந்தது.

18-வது ஆண்டாக திருப்பரங்குன்றம் செல்லும் இந்த பாதயாத்திரைக் குழுவினர் காவடிகளை சுமந்து செல்கின்றனர். வழியில் உள்ள கோயில்களில் இவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர்.

காளையார்கோவில், நாட்டரசன்கோட்டை கோயில்களில் வழிபாடு நடத்திய பிறகு இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை வந்தனர்.

சிவகங்கை அருகே முத்துப்பட்டியிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்ற குழுவினர் அங்கு முருகனுக்கு ஊஞ்சல் ஆட்டி வழிபட்டனர்.

பாதயாத்திரைகுழு பொதுச்செயலர் அப்பச்சி சபாபதி தலைமையில் சென்றது. முத்துப்பட்டி நிகழ்ச்சியில் சுமார் 400 பக்தர்கள் கலந்து கொண்டனர்.


source : Dinamani