Nagaratharonline.com
 
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தமாணவி மாவட்டத்தில் முதன்மை  Aug 2, 10
 
பிளஸ் 2 பொது தேர்வில், தமிழ் பாடத்தில் மறுகூட்டலுக்கு விண் ணப்பித்த காரைக்குடி மாணவி, வருவாய் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக் பள்ளியில், கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்தவர் அமராவதி. இவர் கடந்த அரசு பொதுதேர்வில் 1,164 மதிப்பெண் பெற்றார். தமிழ் பாடத்தில் 200க்கு 176 எடுத்தார். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்து, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார்.



இதில் கூடுதலாக மூன்று மதிப்பெண் (179) பெற்றார்.இவர் பெற்ற மதிப்பெண்:தமிழ் -179, ஆங்கிலம் - 192, கணிதம் - 200, இயற்பியல் - 199, வேதியியல்- 199, உயிரியல் -198. மறுகூட்டலுக்கு முன் 1,164 மதிப்பெண் பெற்றதால், மாவட்ட அளவில் இடம் பெறவில்லை. மறு கூட்டலுக்கு பின், 1,167 மதிப்பெண் பெற்று, தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் இடம்; வருவாய் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.


source : Dinamalar