Nagaratharonline.com
 
காரைக்குடி பகுதியில் ஜூலை 17-ல் மின்தடை  Jul 15, 10
 
காரைக்குடி,ஜூலை 14: சிவகங்கைமாவட்டம் காரைக்குடி பகுதியில் தமிழ்நாடு மின் சார வாரியம் மாதாந்திர பராமரிப்புப்பணி மேற்கொள்வதையொட்டி வரும் சனிக்கிழமை (ஜூலை 17) மின்தடை அறிவிப்புச் செய்துள்ளது.

காரைக்குடி உப மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் காரைக்குடி, தேவகோட்டை சாலை, அரியக்குடி, பேயன்பட்டி, ஆறா வயல், செக்காலைக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

சிவகங்கை மின்பகிர் மான வட்ட மேற்பார்வைப்பொறியாளர் ஆர்வி.யதீந்திரன் இதைத் தெரிவித்துள்ளார்.

Source:Dinamani