Nagaratharonline.com
 
மதகுபட்டியில் மர்ம வேன்  Jun 21, 10
 
மதகுபட்டி அருகே நாமனூரில், கடந்த ஐந்து நாட்களாக நின்ற மர்ம காரை, போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.லட்சுமிபுரம் விலக்கில், கடந்த 16ம் தேதி நள்ளிரவில் இருந்து "டி.என்., 22 இ 8773' என்ற எண்ணுள்ள மாருதி வேன் நின்றது. தொடர்ந்து நேற்று வரை வேன் அதே இடத்தில் நின்றதால், சந்தேகம் ஏற்பட்டது. வெடிகுண்டு, ஆயுதம் இருக்குமோ என கிராமத்தினர் அச்சம் அடைந்தனர். ஊராட்சி தலைவர் சீனி, மதகுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். எஸ்.ஐ., கங்கைநாதபாண் டியன், நேற்று மாலை வேனை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தார். சோதனை செய்ததில், உள்ளே ஒன்றும் இல்லை என தெரிந்தது.திருட்டு: வேனை சிலர் திருடி வந்திருக்கலாம் அல்லது குற்ற செயல்களுக்காக பயன்படுத்தி விட்டு, இங்கு நிறுத்தி இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.


source : Dinamalar