Nagaratharonline.com
 
தங்க, வைர நகைகள் திருட்டு  Jun 18, 10
 
காரைக்குடி அருகே பஸ்சில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடுபோயின. காரைக்குடி செட்டியார் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மனைவி அலமேலு (45). நகராட்சி முன்னாள் தலைவர் உண்ணமாலையின் மகள். கடந்த 15ம் தேதி புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு பஸ்சில் சென்றார். கைப்பையில் 32 பவுன் தங்க, வைர நகைகள் வைத்திருந்தார். பள்ளத்தூர் அருகே பையை காணவில்லை. காணாமல் போன நகைகளின் மதிப்பு 10 லட்ச ரூபாய். டி.எஸ்.பி., மாறன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரிக்கின்றனர்.

source : Dinamalar