Nagaratharonline.com
 
கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு முகாம்  Oct 2, 09
 
காரைக்குடி, அக்.2: காரைக்குடியில் ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டலம் மற்றும் தொழில்வணிகக் கழகம் ஆகியன சார்பில் கிழிந்த மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் வகையில் காரைக்குடித் தொழில்வணிகக் கழகக் கட்டடத்தில் ஒரு நாள் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (அக்.5) நடைபெறுகிறது.

இம்முகாம் காலை 10.30 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும்,

இந்த சந்தர்ப்பத்தை பொதுமக்கள், வணிகர்கள் பயன்படுத்தி கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று ஐ.ஓ.பி வங்கி அதிகாரிகள் மற்றும் தொழில்வணிகக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

source : dinamani 03/10/09