Nagaratharonline.com
 
பொன்னமராவதி : தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்  Jun 13, 10
 
பொன்னமராவதியில் அரசு உத்தரவை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரை செய்த கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். பள்ளிக் கட்டணத்துக்கு உரிய ரசீதை வழங்க வேண்டும். தகுதியான ஆசிரியர்களைக் நியமிக்க வேண்டும். பள்ளிகளுக்கு அரசு அனுப்பிய அரசாணைகளை தகவல் பலகைகளில் ஒட்ட வேண்டும். வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Source : Dinamani