Nagaratharonline.com
 
போலி மருத்துவர்கள் 10 பேர் கைது  Jun 13, 10
 
சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் போலி மருத்துவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த புகார்களைத் தொடர்ந்து, போலீஸôர் வெள்ளிக்கிழமை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஆர்.ஐ.எம்.பி என்ற பெயரில் போலி சான்றிதழ்களை வைத்துக் கொண்டு ஆங்கில மருத்துவ முறைகளை மேற்கொண்டனராம். கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: மதகுபட்டி ஜவஹர்லால், காரைக்குடி அருள், அல்போன்ஸ், ராஜு, பரமசிவம், மருதுபாண்டியன், திருப்பத்தூர் நிர்மல்குமார், பழனிவேல், முறையூர் செல்வம், புதுவயல் ராஜ்குமார்

source : Dinamani