Nagaratharonline.com
 
மானாமதுரை : பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோயிலில் வைகாசி அமாவாசை யாகம்  Jun 13, 10
 
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோயிலில், வெள்ளிக்கிழமை இரவு வைகாசி அமாவாசை யாகம் நடைபெற்றது.


உலக மக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று பேரானந்தத்துடன் வாழ வேண்டி, ப்ரத்யங்கிரா தேவி அம்மன் சன்னதி எதிரே இந்த யாகம் நடைபெற்றது. இதில், புனித நீர் குடங்கள் வைக்கப்பட்டிருந்தன. பட்டுப் புடவைகள், மாலைகள், மிளகு, திரவியப் பொருள்கள், பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் யாகத் தீயில் இடப்பட்டன.


யாகத்தில் பூர்ணாஹூதி முடிந்து ப்ரத்யங்கிரா தேவிக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன்பின், புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ப்ரத்யங்கிரா வேத தர்ம டிரஸ்ட் நிர்வாகம் செய்திருந்தது


source : Dinamani