Nagaratharonline.com
 
காரைக்குடி பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் தொலைபேசி இணைப்புக்கு சலுகைகள்  Oct 2, 09
 
காரைக்குடி, அக்.2: பி.எஸ்.என்.எல். காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பிராட்பேண்ட் இணைப்பு, தொலைபேசி இணைப்புகள் பெற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதன் பொதுமேலாளர் கணேசன் கூறியதாவது:

பிராட்பேண்ட் வசதிக்காக கொடுக்கப்படும் மோடம், மொத்தவிலையிலோ அல்லது வாடகை மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.

வாடைகை மோடம் மாதிரி-1 மற்றும் 3-க்கு மாதம் ரூ. 50-ம், மாதிரி-2 மற்றும் 4-க்கான மோடத்துக்கு மாதம் ரூ. 80-ம் வாடகையாக செலுத்தவேண்டும்.

2 ஆண்டுகள் வரையில் தொடர்ந்து வாடகையில் உள்ளவர்களுக்கு வாடகைக்கட்டணத்தில் 50 சதவீதம் குறைக்கப்படும்.

இந்த ஆண்டுவிழாக் காலச் சலுகையாக வாடகை மோடம் பெறுவோருக்கு அமைப்புக்கட்டணம் ரூ. 250 ரத்து செய்யப்படுகிறது.

இச்சலுகையானது டிச. 31 வரை அமலில் இருக்கும். தரைவழி மற்றும் வில் புதிய தொலைபேசி இணைப்புகளுக்கு செப். 31-ம் தேதிவரை அமைப்புக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வைப்புத்தொகை ரூ. 500-ம் தவணை முறையில் செலுத்த வாய்ப்புத்தரப்பட்டுள்ளது. சில நாள்கள் மட்டும் தான் இச்சலுகை உண்டு.

கிராமப்புறத்தில் வில் தொலைபேசிகள் ஏதாவதொரு காரணத்துக்காகத் துண்டிக்கப்பட்டிருந்தால் இணைப்பை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.

வில் தொலைபேசிகளை ப்ரீபெய்டு லைப்-டைப் இணைப்பாக மாற்றுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்றிக்கொள்ள விரும்பும் பட்சத்தில் ரூ. 10 பேசும் மதிப்பு இலவசமாக முதலில் தரப்படும்.

மாதாந்திரக் கட்டணம் எதுவும் கட்டத்தேவையில்லை. தேவைப்பட்டால் ரீசார்ஜ், டாப்-அப் செய்துகொண்டால் போதும். இதற்கான ரீசார்ஜ் கார்டுகள் ரூ. 111, ரூ. 225, ரூ. 336, ரூ. 562, ரூ. 1122 ஆகிய வகைகளிலும், டாப்-அப் கார்டு ரூ. 55 மதிப்பிலும் கிடைக்கும் என்றார் பொதுமேலாளர்.

source : Dinamani 03/10/09