Nagaratharonline.com
 
நெற்குப்பை: கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு  Jun 7, 10
 
திருப்பத்தூர், ஜூன் 4: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நெற்குப்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு மற்றும் மகப்பேறு உதவித்திட்டத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரகுபதி தலைமை வகித்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

வட்டார சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார், நாகராஜன் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஓன்றியத்தைச்சேர்ந்த 95 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.

அனைவருக்கும் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ் 3000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஐந்து வகையான சாதம் வழங்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் சகாயஜெரால்டுராஜ் நன்றி கூறினார்.


Source:Dinamani