Nagaratharonline.com
 
தேவகோட்டையில் ​ இண்டர்நெட் சேவை பாதிப்பு  May 31, 10
 
தேவகோட்டை,​​ மே 30: ​ ​ ​ ​ ​ சிவகங்கை மாவட்டம்,​​ தேவகோட்டையில் கடந்த சில தினங்களாக இண்டர்நெட் சேவை​ ​ ​ ​ தேவ​கோட்டை நக​ரில் இண்​டர்​நெட் சேவையை அர​சின் பொதுத் துறை நிறு​வ​னமான பி.எஸ்.என்.எல்.​ மட்டுமே வழங்கி வருகிறது.​ பிற தனியார் நிறுவனங்கள் இன்னும் தங்களது சேவையை இங்கு துவங்கவில்லை.​ எனவே,​​ இண்டர்நெட் பயன்படுத்தும் 100 சதவீத மக்களும் பி.எஸ்.என்.எல்.​ நிறுவனத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

​ ​ ​ ​ இந்நிலையில்,​​ இங்கு சாலை,​​ பாலம் மற்றும் குடிநீர் குழாய் அமைக்க பள்ளங்கள் ​ தோண்டும்போது இண்டர்நெட் கேபிள்கள் துண்டிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.​ ​

இதனால்,​​ பல நேரங்களில் இண்டர்நெட் சேவை பாதிக்கப்படுகிறது.​ ​ ​

​ ​ ​ ​ ​ மேலும்,​​ அதிரித்து வரும் புதிய இணைப்புகளாலும் சரியான முறையில் இண்டர்நெட் சேவையை வழங்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Source:Dinamani