Nagaratharonline.com
 
காரைக்குடி அருகே 10 ஆண்டுகளாக திருமண மோசடி வழக்கில் தேடப்பட்ட பெண் கைது; மகளிர் போலீசார் நடவடிக  May 28, 10
 
காரைக்குடி, மே 22-


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த முத்துக்கருப்பன் பல்வேறு பெண்களுடன் சவகாசம் வைத்திருந்தார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வள்ளி என்ற பெண்ணை முத்துக்கருப்பன் 2-வதாக திருமணம் செய்தார். தொடர்ந்து வள்ளி முத்துக்கருப்பனின் வீட்டிற்கே வந்து அவரது முதல் மனைவியை அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

இதேபோல் வள்ளி ஏராளமான வாலிபர்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து முத்துக்கருப்பனின் முதல் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வள்ளியை தேடி வந்தனர்.
இதற்கிடையே முத்துக்கருப்பனும் தனது முதல் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு தலைமறைவானார். நேற்று வலையப்பட்டிக்கு வந்த வள்ளியை காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி கைது செய்தார்.

Source:Maalaimalar