Nagaratharonline.com
 
தேவகோட்டை நகரத்தார் பள்ளி இரண்டாமிடம்  May 27, 10
 
தேவகோட்டை மே 26:சிவகங்கை மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேவகோட்டை நகரத்தார் பள்ளி மாணவர் எஸ்.அருண்குமார் 491 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாமிடம் பிடித்தார்.

இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 96, ஆங்கிலம் 98, கணக்கு 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98 இவருடைய தந்தை சுப்பிரமணியன் பள்ளியில் உதவியாளராக இருந்து வருகிறார். தாய் ஜோதிமணி இல்லத்தரசி.எதிர்காலத்தில் பொறியியல் பட்டம் பெற ஆசை என தெரிவித்தார்.

Source:Dinamani