Nagaratharonline.com
 
அனுமனை வழிபட்டால் சனி பயம் விலகும்'' சிவல்புரி சிங்காரம் பேச்சு  Aug 2, 23
 
காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடியில் உள்ள சிவ ஆஞ்சநேயர் கோவிலில் 18-ம் ஆண்டாக திருவிளக்கு பூஜை கிரிவலக்குழுத்தலைவர் சிவல்புரி சிங்காரம் தலைமையில் நடைபெற்றது.

சிவல்புரி சிங்காரம் "மகிழ்ச்சி தரும் மாருதி வழிபாடு" என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

அனுமனை வழிபடுவதால் ஆனந்தமான வாழ்வு அமையும். பிணி தீர்க்கும் ஆற்றல் அனுமன் வழிபாட்டிற்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் பிரிந்தவரை
இணைத்து வைக்கும் ஆற்றலும் உண்டு. பேச்சாற்றல் சிறப்பாக அமைய வழிவகுப்பவரும் அனுமன்தான். யுத்தம் நடந்தபோது மாண்டவரை மீட்டு கொண்டுவர சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறந்து வந்தவர் அனுமன். எனவே ஆரோக்கிய தொல்லையில் அவதிப்படுபவர்கள் அனுமனை வழிபட்டு மருத்துவ ஆலோசனை பெற்றால் நோய் குணமாகும்.