Nagaratharonline.com
 
பாக​னே​ரி​யில் ஐயப்​பன் சிலை பிர​திஷ்டை  May 25, 10
 
சிவ​கங்கை,​மே 24:​ ​ சிவ​கங்கை மாவட்​டம்,​​ பாக​னே​ரி​யில் புதி​தாக அமைக்​கப்​பட்ட ​ஐயப்​பன் கோயி​லில் சுவாமி சிலை பிர​திஷ்டை செய்​யப்​பட்டு திங்​கள்​கி​ழமை கும்​பா​பி​ஷே​கம் நடை​பெற்​றது.​ இதில் பந்​த​ள​ராஜா வம்​சா​வ​ளி​யி​னர் பங்​கேற்​ற​னர்.​

​ ​ பாக​னேரி பழைய வளவு பரு​சப்​பு​ளித் தெரு​வில் இக்​கோ​யில் உள்​ளது.​ அவ்​வூர் பிர​மு​கர் அ.சித.கண​வே​லா​யு​தம் செட்​டி​யார் குடும்​பத்​தி​னர்,​​ ஐயப்​பப் பக்​தர்​கள் மற்​றும் பொது​மக்​கள் விரும்​பி​ய​படி கோயில் கட்​ட​மைப்​புப் பணி​கள் கடந்த 8 மாதங்​க​ளாக நடை​பெற்று வந்​தது.​

​ ​ ரூ.10 லட்​சம் செல​வில் கோயில் கட்டி முடிக்​கப்​பட்​டது.​ கோயில் வளா​கத்​தில் கன்​னி​மூல கண​பதி சன்​ன​தி​யும் இடம்​பெற்​றுள்​ளது.​

​ ​ கோயி​லில் ஐயப்​பன் சிலை பிர​திஷ்டை மற்​றும் கும்​பா​பி​ஷே​கப் பணி​கள் சனிக்​கி​ழமை ​ துவங்​கி​யது.​

கோயில் அருகே யாக​சாலை அமைக்​கப்​பட்டு,​​ மதுரை கூடல் நகர் கல்​யா​ண​சுந்​த​ரம் சிவாச்​சா​ரி​யார் தலை​மை​யில் 4 கால யாகம்,​​ கண​ப​தி​ஹோ​மம்,​​ கோ பூஜை ஆகி​யவை நடத்​தப்​பட்​டன.​

​ ​ திங்​கள்​கி​ழமை காலை கேரள பந்​தள ராஜா பரம்​பரை வம்​சா​வ​ளி​யைச் சேர்ந்த ​ ஆர்.ராம​வர்​ம​ராஜா முன்​னி​லை​யில் ஐயப்​பன் கற்​சிலை பிர​திஷ்டை செய்​யப்​பட்டு கும்​பா​பி​ஷேக பூஜை​கள் துவங்​கி​யது.​

​ ​ காலை 7 மணி​ய​ள​வில் சிவாச்​சா​ரி​யார்​கள் ஐயப்​பன் கோயில் கோபுர கல​சத்​தில் புனத நீர் ஊற்றி அபி​ஷே​கம் செய்​த​னர்.​ கன்​னி​மூல கண​பதி சன்​னதி கோபுர கல​சத்​தி​லும் கும்​பா​பி​ஷேம் செய்​யப்​பட்​டது.​

​ ​ அப்​போது கோயி​லைச்​சுற்​றி​லும் நின்ற ஆயி​ரக்​க​ணக்​கான பக்​தர்​கள் ஐயப்​பனை தரி​ச​னம் செய்​த​னர்.​

ஐயப்​பன் சிலைக்கு பால்,​​ தேன்,​​ சந்​தன அபி​ஷே​கங்​கள் செய்து அலங்​கா​ரம் ​ ஆரா​தனை நடத்​தப்​பட்டு பக்​தர்​க​ளுக்கு பிர​சா​தம் வழங்​கப்​பட்​டது.​

​ ​ பாக​னேரி நாட்​டார் மற்​றும் நக​ரத்​தார் சமூ​கத்​தி​னர் திர​ளாக நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​ற​னர்.​ ​ கும்​பா​பி​ஷேக அமைப்​புப் பணி​களை அலங்​கா​நல்​லூர் ஸ்ரீதர்​ம​சாஸ்தா ஆலய நிர்​வாகி ஏ.எல்.ஸ்ரீனி​வா​சன் செட்​டி​யார் செய்​தி​ருந்​தார்.​ டி.புக​ழேந்தி விழா ஏற்​பா​டு​க​ளைச் செய்​தி​ருந்​தார்.

Source:Dinamani