Nagaratharonline.com
 
ஜங்ஷன் அந்தஸ்து பெற்ற நிலையிலும்-அடிப்படை வசதிகள் இல்லாத காரைக்குடி ரெயில் நிலையம்  Apr 7, 23
 
சென்னை மற்றும் நெடுந்தூரம் செல்லும் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையத்தில் மொத்தம் 5 பிளாட் பாரங்கள் உள்ளன. இந்த பிளாட் பாரங்களில் விரைவு ரெயிலில் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை அடையாளம் காட்டும் வகையில் டிஜிட்டல் போர்டுகள் ஜங்ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையங்களில் இருப்பது வழக்கம். ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் சாதாரண போர்டுகள் உள்ளதால் பெட்டிகள் அருகில் வந்து பார்த்தால்தான் அந்த பெட்டிகளின் கோச் எண் தெரியும் நிலை உள்ளது.

பழைய ரெயில் நிலையத்திற்கும், புதிய ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளதால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. அப்பகுதியில் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்தில் முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் இயக்க வேண்டும். ரெயில்கள் வரும் நேரத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுண் பஸ்கள் இயக்க வேண்டும்.