Nagaratharonline.com
 
தேவகோட்டையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்  May 25, 10
 
தேவகோட்டை,மே 22: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் மாலை நேரத்தில்போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

தேவகோட்டையில் உள்ள திருப்பத்தூர் சாலைதான் ஒரே முக்கியமான சாலை. இந்த வழியாகத்தான் ராமேசுவரத்திலிருந்து திருச்சி செல்லும் பஸ்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஒத்தக்கடை வரை மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மணல் லாரிகள், சரக்கு லாரிகள், விறகு ஏற்றி வரும் லாரிகள் உள்ளிட்டவை மாலை நேரங்களில் இந்த சாலை வழியாக வந்து நின்றுவிடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் செல்ல இயலாத நிலை உள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சமீபத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் இடங்களுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

இருப்பினும்நகரில் போக்குவரத்து நேரிசல் தொடர்கதையாக உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகளை போலீஸ் உயர் அதிகாரிகள் பரிசீலித்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Source:Dinamani