Nagaratharonline.com
 
பழநி தைப்பூச பாதயாத்திரையில் ரத்னவேலுடன் சென்ற நகரத்தார்  Jan 16, 22
 
தைப்பூச விழாவையொட்டி காரைக்குடி பகுதி நகரத்தார் குழுவினர் ரத்னவேல் மற்றும் காவடி சுமந்தபடி நத்தம் வழியாக பழநிக்கு பாதயாத்திரை சென்றனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, கண்டனூர், புதுவயல், பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்டோர் காவடி எடுத்து குன்றக்குடியில் குழுவாக சேர்ந்தனர். அங்கு சண்முகநாத பெருமாள் கோயிலில் பாரம்பரிய ரத்னவேல் வைத்து பூஜை செய்து புறப்பட்டனர். நேற்றிரவு சமுத்திரப்பட்டியில் தங்கினர்.இன்று (ஜன.15) காலை இக்குழுவினர் நத்தம் வந்தனர். நத்தம் மாரியம்மன் கோவில் தெரு வாணியர் மடத்தில் காவடி மற்றும் ரத்னவேலுக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து திண்டுக்கல் வழியாக பழநி செல்கின்றனர்.தைப்பூசத்திற்கு மறுநாள் இக்குழுவினருக்கென சிறப்பு பூஜை நடைபெறும். பின்னர் மீண்டும் பழநியில் இருந்து பாதயாத்திரையாகவே ஊர் திரும்புவார். நானுாறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் இந்த யாத்திரையின்போது நகரத்தார்கள் பாரம்பரிய வெள்ளை வேட்டி அணிந்து, செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.