Nagaratharonline.com
 
புகாரால் வி.ஏ. ஓ., மாற்றம்  Dec 15, 21
 
தேவகோட்டை தாலுகாவில் வீடியோ , மற்றும் புகாரின் அடிப்படையில் கோபிக்கண்ணன் , சந்திரசேகர் ஆகிய இரு வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இருவருக்கும் இதே தாலுகாவில் மீண்டும் பணி வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் இளைஞர் அணி செயலாளர் பெரியசாமி தலைமையில் கட்சியினர் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரனிடம் புகார் அளித்தனர்.புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வி.ஏ.ஓ.,க்களை வேறு தாலுகாவிற்கு மாற்ற வேண்டும். மேலும் கல்லங்குடி வி.ஏ.ஓ., அருணாதேவி பயிர் காப்பீடு பெறுவதற்காக விவசாயம் செய்யாத தரிசு நிலத்தில் விவசாயம் செய்ததாக கூறி அடங்கல் சான்றிதழ் வழங்கியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தனர்.

இது தொடர்பாக ஆய்வு செய்த ஆர்.டி.ஓ. பிரபாகரன், சம்பந்தப்பட்ட பெண் வி.ஏ.ஓ. அருணாதேவியை தேவகோட்டை தாலுகா கல்லங்குடி குரூப்பில் இருந்து திருப்புத்தூர் தாலுகா துவார் குரூப்பிற்கு மாற்றி உத்தரவிட்டார்.