Nagaratharonline.com
 
பாதுகாப்பு இல்லாத ரோடு பணி : சிங்கம்புணரி To திருப்புத்துார்  Oct 19, 21
 
சிங்கம்புணரியிலிருந்து திருப்புத்துார் வரை பழைய ரோடு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த ஊழியர்களை நிறுத்தாமல் நடைபெறும் இந்தப் பணியால் ஆரம்பம் முதலே பாதுகாப்பு விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகிறது.

துவக்கத்தில் தேவையில்லாத இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டது. ஒரு கிராமத்தினர் நீதிமன்றத்தை நாடி மரங்களை பாதுகாத்தனர்.தொடர்ந்து ரோடு பணி நடப்பது குறித்து எந்த எச்சரிக்கை பலகையும் இல்லை.

இரு பிரிவாக ரோட்டை பிரித்து பணி செய்யாமல் ஒட்டு மொத்த ரோட்டிலும் ஜல்லிக்கற்களை கொட்டி பணி செய்வதால் தினமும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்தை தவிர்க்க போதிய எச்சரிக்கை போர்டு பாதுகாப்பு தடுப்பு அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.