Nagaratharonline.com
 
NEWS REPORT: 21 அடி உயர கற்பக விநாயகர் சிலை, நெற்குப்பையில் நிறுவப்பட உள்ளது !  Oct 11, 21
 
 
 
நெற்குப்பையில் உள்ள இளையாத்தங்குடி கோவில் - கழனிவாசல்குடி பிரிவைச் சேர்ந்த நகரத்தார்கள், நெற்குப்பை - பொன்னமராவதி சாலையில் உள்ள தங்களது வைகாசி விசாகத் தோப்பில், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள 21 அடி திருச்செந்தூர் முருகன் சிலைக்கு அருகில், புதிய 21 அடி உயர பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிலையை நிறுவ உள்ளனர்.

இதற்கான தச்சு செய்யும் பணிகள் அண்மையில் நடைபெற்றன. இந்த வைகாசி விசாகத் தோப்பு தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவானதையொட்டி, இந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இருபத்தி ஒரு லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்படவுள்ள - செட்டிநாட்டிலேயே மிக உயரமான, இந்தக் கற்பக விநாயகர் சிலைக்கு நன்கொடை தர விரும்புபவர்கள்

NKNK TRUST அக்கவுண்டிற்குப் பணம் அனுப்பி வைத்து, விநாயகர் அருளைப் பெற வேண்டுகிறோம். பணம் அனுப்பிய தகவலையும் திரு. பழ். வயிரவன் அவர்களிடம் தெரிவிக்கவும்.

நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விவரம் :

NKNK POOJA FUND,
Indian Bank,
Nerkuppai Branch, Sivaganga District

Current A/c number : 6064513903,

IFSC: IDIB000N021

இப்படிக்கு

பழ. வயிரவன்
9789974880

அரு. கணேசன்

சுப. சாத்தப்பன