Nagaratharonline.com
 
தேவகோட்டையில் நகை பறிப்பு  Oct 11, 21
 
தேவகோட்டை பள.செ.வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி சுலோச்சனா .60., இவர் நேற்று முன்தினம் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பஸ்சில் அரியக்குடி சென்றார். டூவீலரில் வந்த ஒருவர் பஸ் வர நேரமாகும் தான் கொண்டு போய் விடுவதாக கூறி சுலோச்சனாவை டூவீலரில் ஏற்றி வந்துள்ளார். உஞ்சனை ரோட்டில் வந்த போது சுலோச்சனாவை இறக்கி விட்டு கையில் இருந்த பர்ைஸ பறித்து சென்றுள்ளார். பர்சில் ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள தங்க செயினும் ரூ 100 இருந்துள்ளது.

சுலோச்சனா ஆறாவயல் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.