Nagaratharonline.com
 
NEWS REPORT: OMR -'டோல்கேட்' வசூல் நிறுத்த அறிவிப்பு: பொதுமக்கள் அமோக வரவேற்பு  Sep 1, 21
 
சோழிங்கநல்லுார் மண்டலத்தில் இருந்த நான்கு சுங்கச்சாவடிகளில், 30ம் தேதி முதல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்படுவதாக, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


ராஜிவ்காந்தி சாலையில், மத்திய கைலாஷில் இருந்து கேளம்பாக்கம் வரை, நாள் ஒன்றுக்கு சராசரியாக, 80 ஆயிரம் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்கின்றன; 200க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் தினமும் ஆறு நடைகள் இயக்கப்படுகின்றன.சுங்கச்சாவடிகளில், 10 வினாடிகளில் ஒரு வாகனம் கடந்து செல்வதால், ராஜிவ்காந்தி சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் நிறுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது