Nagaratharonline.com
 
NEWS REPORT: கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லுாரியில் முப்பெரும் விழா  Aug 15, 21
 
கோவிலுார் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லுாரியில் 75 வது சுதந்திர தினம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்ததினம் மற்றும் பாரதியாரின் நூற்றாண்டு என்ற முப்பெரும் விழா நடந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்காட்சியை அழகப்பா பல்கலை பதிவாளர் சேகர் திறந்து வைத்தார். கோவிலுார் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தலைமைவகித்து பேசினார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆன்லைன் வழியாக பேசினார். கல்லுாரி முதல்வர் மாணிக்கவாசகம் வரவேற்றார். துணை முதல்வர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.