Nagaratharonline.com
 
NEWS REPORT: கோட்டையூர் சிறந்த பேரூராட்சியாக தேர்வு - ஒரே வருடத்தில் கிடைத்ததால் பெருமிதம்  Aug 12, 21
 
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சி மாநிலத்தில் மூன்றாவது சிறந்த பேரூராட்சியாக தேர்வாகியுள்ளது.





கோட்டையூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 1979ல் கோட்டையூர் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, முதல்வர் விருதுக்காக பேரூராட்சிகளின் இயக்குனரகத்தின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எட்டு காரணிகளை மையமாக வைத்து ஆய்வு நடந்தது.

ஆய்வுகளின் அடிப்படையில், மாநிலத்தில் மூன்றாவது சிறந்த பேரூராட்சியாக கோட்டையூர் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்காக ரூ.3 லட்சம் மற்றும் நற்சான்றிதழை ஆக.15 சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் வழங்கவுள்ளார்.செயல்அலுவலர் நா.கவிதா கூறுகையில்;1979ல் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. முதன்முறையாக மாநிலத்தில் மூன்றாவது சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.