Nagaratharonline.com
 
சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது.  May 25, 21
 
சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது.

கொட்டாம்பட்டியில் இருந்து சிங்கம்புணரி வழியாக திருப்புத்தூர் வரை பணிகள் நடக்கிறது.ஊரகப்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் சிங்கம்புணரி நகர் பகுதியிலும் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.

சிங்கம்புணரி நகர் உள்ளிட்ட சாலையோரங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமலும், மருதிப்பட்டி போன்ற இடங்களில் கற்கள் கொட்டப்பட்ட நிலையில் அடுத்தகட்டப்பணிகள் நடக்காமலும் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோரும், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.