Nagaratharonline.com
 
கல்லலில் நகரத்தார்கள் செவ்வாய் பொங்கல் விழா  Feb 10, 21
 
கல்லல் அருகே சொக்கநாதபுரம் நகர காளியம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாயை முன்னிட்டு நகரத்தார்கள் 319 பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.


ஆண்டுதோறும் தை மாத கடைசி செவ்வாய் அன்று நகரத்தார்கள் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா கொண்டாடப்படும். பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த விழாவில், இப்பகுதியை சேர்ந்த நகரத்தார்கள்கள் அனைவரும் ஒன்றினைந்து கோயிலில் பொங்கல் வைத்து வழிடுவர். நேற்று கோயில் முன் 319 பானைகளில் பொங்கல் வைத்தனர். முதல் பொங்கல் பானை கருப்பையா குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் முதலில் பொங்கல் வைத்தனர். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.