Nagaratharonline.com
 
நெற்குப்பை அருகே மின்கம்பி அறுந்து 14 ஆடுகள் இறந்தன  Aug 16, 20
 
நெற்குப்பை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் 14 ஆடுகள் இறந்தன.

துவார் ஊராட்சி கருமிச்சான்பட்டியைச் சேர்ந்த அழகப்பன் மனைவி பொன்னழகு. இவரது வீடு அருகே ஆடு அடைக்கும் பட்டி உள்ளது. அதன் மீது தெக்கூரிலிருந்து வேலங்குடிக்கு உயர் மின் அழுத்தகம்பி செல்கிறது. நேற்று காலை 8:00 மணிக்கு கம்பிகள் அறுந்து ஆடுகள்இருந்த பட்டி மீது விழுந்தது.

மின்சாரம் தாக்கி பட்டியில் இருந்த 14 ஆடுகளும் இறந்தன.கால்நடை மருத்துவர் உடற்கூறு ஆய்விற்கு பின் ஆடுகள் புதைக்கப்பட்டன. தாசில்தார் ஜெயலெட்சுமி, வி.,ஏ.ஓ.,குணசேகரன், ஊராட்சித் தலைவர் சரவணன் ஆய்வு செய்தனர். மின்துறையினர் உடனடியாக மின்வயரை மாற்றி மின் இணைப்பு கொடுத்தனர்.

source : Dinamalar