Nagaratharonline.com
 
திருப்புத்துாரில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிப்பு  Jul 23, 20
 
திருப்புத்துாரில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதற்கேற்ற அளவில் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. பலரும் முகக்கவசம் அணியாமல் கடை வீதிகளில் காணப்படுகின்றனர்.

நேற்று தாசில்தார் ஜெயலெட்சுமி, வி.ஏ.ஓ. குழுவினர் வீதிகளில் திடீர் ஆய்வு நடத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 100 அபராதம் விதித்தனர்.இன்று முதல் அபராதம் ரூ 500 ஆக அதிகரிக்கும் என்று எச்சரித்தனர்.