Nagaratharonline.com
 
ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பு துவங்கியது  May 8, 20
 
ஆத்தங்குடி டைல்ஸ் புகழ் பெற்றதாகும்.காரைக்குடி நகரத்தாரின் வீடுகளை அலங்கரித்த ஆத்தங்குடி டைல்ஸ் கற்கள் தற்போது, உலகம் முழுவதும்ஏற்றுமதியாகிறது.

பூக்கற்கள் எனப்படும் ஆத்தங்குடி டைல்ஸ் 200க்கும் மேற்பட்ட டிசைன்களில் தயார் செய்யப்படுகிறது. ஆத்தங்குடியில் 30க்கும் மேற்பட்ட டைல்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிக்கும் பணியும்
முற்றிலுமாக முடங்கி போயிருந்தது. தற்போது ஊரடங்குதளர்வு காரணமாக ஆத்தங்குடியில் டைல்ஸ் தயாரிப்பு பணி மீண்டும் தீவிரமடைந்துள்ளது.