Nagaratharonline.com
 
இளை​யான்​குடி தொகுதியில் ​கோயில் திருப்​ப​ணிக்கு ரூ.90 லட்​சம் ஒதுக்​கீடு  May 17, 10
 
சிவ​கங்கை,​மே 15: ​ ​ ​ ​ சிவ​கங்கை மாவட்​டம்,​​ இளை​யான்​குடி தொகு​தி​யைச் சேர்ந்த 3 கோயில்​க​ளின் திருப்​ப​ணிக்கு அற​நி​லை​யத் துறை சார்​பில் ரூ.90 லட்​சம் ஒதுக்​கப்​பட்டு இருப்​ப​தாக சு.ப.மதி​ய​ர​சன் எம்​எல்ஏ தெரி​வித்​தார்.​

​ ​ இது​தொ​டர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில்,​​ இளை​யான்​குடி தொகுதி மக்​க​ளின் நீண்ட கால கோரிக்​கையை ஏற்று இந்து சமய அற​நி​லை​யத்​துறை அமைச்​சர் கே.ஆர்.பெரி​ய​க​ருப்​பன் நிதி ஒதுக்​கீடு செய்​துள்​ளார்.​

​ ​ தாய​மங்​க​லம் முத்​து​மா​ரி​யம்​மன் கோயி​லில் 5 நிலை ராஜ​கோ​பு​ரம் அமைக்க ரூ 35 லட்​சம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.​ இதே போன்று இளை​யான்​குடி தொகுதி ஆனந்​தூ​ரில் உள்ள திரு​மே​னி​நா​தர் கோயில் திருப்​ப​ணிக்கு ரூ.​ 30 லட்​ச​மும்,​​ ராதா​னூர் தில்லை நாதர் திருக்​கோ​யில் திருப்​ப​ணி​க​ளுக்​காக ரூ 25 லட்​ச​மும் ஒதுக்​கீடு செய்​துள்​ளார்.​​ ​ இதற்​காக தொகுதி மக்​கள் சார்​பில் நன்றி தெரி​வித்​துக்​கொள்​கி​றேன் என சுப.மதி​ய​ர​சன் ​ தெரி​வித்​துள்​ளார்.


source : Dinamani