Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் சிறப்பு ஹோமம்  Apr 3, 20
 
 
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மனிதர்களை பாதுகாக்கவும், பூரணமாக நோய்த்தொற்றை நீக்க வலியுறுத்தி இறைவனை வேண்டி பாஸ்து பதாத்ரஹோமம்' நடத்தப்பட்டது.

காலை 9:00 மணிக்கு கோயில் குருக்கள் பிச்சைக்குருக்கள்,சோமசுந்தரம் ஆகியோர் மூலவர் சன்னதி முன்10 கலசங்கள் பிரதிஷ்டை செய்து பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி மெ.மெய்யப்பன், குருவிக்கொண்டான்பட்டி பழ. பழனியப்பன் (எ) செந்தில் முன்னிலையில் ேஹாமத்தைத் துவக்கினர். பின்னர் புனித கலச நீரால் சுவாமி,அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.