Nagaratharonline.com
 
ஒக்கூரில் 800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை வழங்கி பசியை போக்கினார் சேக்கப்ப செட்டியார்  Mar 31, 20
 
கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிய ஒக்கூரில் 800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை வழங்கி பசியை போக்கினார் அதே கிராமத்தைச் சேர்ந்த சேக்கப்ப செட்டியார்

.அவர் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் உணவுக்கு வழியின்றி தவிக்கிறார்கள். எங்கள் கிராமத்திலும் பல குடும்பத்தின் நிலையும் இது தான். இதனால் கிராம மக்களுக்கு அரிசி வழங்க நானும், மனைவி நாகம்மையும் முடிவு செய்து 800 குடும்பத்திற்கு அரிசி வழங்கினோம். அடுத்ததாக எண்ணெய், பருப்பு வழங்க உள்ளோம், என்றார்.