Nagaratharonline.com
 
நாட்​ட​ர​சன்​கோட்டை கண்​ணு​டை​ய​நா​யகி அம்​மன் கோயில் வைகாசி விழா:​ மே19-ல் தொடக்​கம்  May 16, 10
 
சிவ​கங்கை,​மே 15: ​ ​ ​ ​ நாட்​ட​ர​சன்​கோட்டை ஸ்ரீகண்​ணு​டைய நாய​கி​யம்​மன் கோயில் வைகா​சிப் பெரு​விழா வரும் புதன்​கி​ழமை ​(மே 19) கொடி​யேற்​றத்​து​டன் துவங்​கு​கி​றது.​

​ ​ ​ அன்று மாலை 4 மணிக்கு சங்​கா​பி​ஷே​க​மும்,​​ இரவு 7 மணிக்கு காப்​புக் கட்​டு​த​லும் நடை​பெற உள்​ளது.​ மே 20 வியா​ழக்​கி​ழமை முதல் முதல் மே 24 வரை தின​மும் காலை​யில் வெள்​ளிக்​கே​ட​கத்​தி​லும்,​​ இர​வில் அம்​மன் பவனி வரு​த​லும் நடை​பெ​றும்.​

​ ​ ​ மே 25 அன்று இரவு அம்​மன் பல்​லக்​கில் வலம் வரு​தல்,​​ மாலை​யில் தங்க ரதத்​தில் உள் வீதி புறப்​பாடு,​​ தொடர்ந்து அன்ன வாக​னத்​தில் வெளி​வீதி புறப்​பாடு,​​ மே 26 அலங்​கார மண்​ட​பத்​தில் காலை 9.10-க்கு எழுந்​த​ருள்​தல்,​​ இரவு 7 மணிக்கு அம்​மன் வெள்ளி ரதத்​தில் பவனி.​

​ ​ மே 27 அன்று காலை 9.15க்கு திருத்​தே​ரில் அம்​மன் பவ​னி​வ​ரு​தல்,​​ இரவு வெள்​ளிக் குதிரை வாக​னத்​தில் பவனி,​​ மே 28- காலை பூரண உத்​ச​வம்,​​ இரவு வெள்​ளிக்​கு​திரை வாக​னத்​தில் அம்​மன் முயல் குத்தி திரு​நா​ளு​டன் விழா நிறைவு பெறு​கி​றது.​

​ ​ ​ திரு​விழா நாள்​க​ளில் அம்​ம​னுக்கு விஷேச அபி​ஷே​கம்,​​ அலங்​கா​ரம்,​​ அர்ச்​ச​னை​கள் ​ நடை​பெ​றும்.​

திரு​விழா துவங்​கு​வது முதல் தின​மும் நாக​சு​வர கச்​சே​ரி​யும்,​​ சம​யப்​பே​ரு​ரை​க​ளும்,​​ சிறப்பு இன்​னிசை கச்​சே​ரி​க​ளும்,​​ வாண​வே​டிக்​கை​க​ளும் நடை​பெ​றும்.​

​ சிவ​கங்கை சமஸ்​தான தேவஸ்​தான மேலா​ளர் பா.இளங்கோ,​​ ஆலய கண்​கா​ணிப்​பா​ளர் பி.சர​வ​ண​பெ​ரு​மாள்,​​ கெüரவ கண்​கா​ணிப்​பா​ளர் கே.என்.​ ராதா​கி​ருஷ்​ணன் என்ற சின்​ன​ராதா மற்​றும் கோயில் ஊழி​யர்​கள் ​விழா ஏற்​பா​டு​க​ளைச் செய்து வரு​கின்​ற​னர்.​​ ​

Source:Dinamani