Nagaratharonline.com
 
கண்டவராயன்பட்டி கிணற்றடி காளியம்மன் கோயிலில் திருட்டு  Dec 23, 19
 
கண்டவராயன்பட்டி கிணற்றடி காளியம்மன் கோயிலில் புதன்கிழமை காலை 10.30 மணி வரை பக்தா்கள் சுவாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனா். அதன் பின்னா் கோயில் பூசாரி கோயில் வாசலை பூட்டிவிட்டு சென்று விட்டாா். பின்னா் சில மணி நேரம் கழித்து மீண்டும் அவா் சென்ற போது கோயில் கதவு திறந்து கிடந்தது. அப்போது கோயிலுக்குள் இருந்த சர விளக்கு, சூலாயுதம்,. பித்தளைப்பாத்திரம், ஒலி பெருக்கி ஆம்ப்ளிபயா் போன்றவை திருடு போனது தெரியவந்தது.

இதனையடுத்து பூசாரி அளித்த புகாரின் பேரில் கண்டவராயன்பட்டி போலீஸாா் கோயில் பொருள்களை திருடிய மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.