Nagaratharonline.com
 
NEWS REPORT: பொன்.புதுப்பட்டி பூலோகநாதா் கோயிலில் பாலாலயம்  Nov 29, 19
 
 
பொன். புதுப்பட்டி புவனேசுவரி உடனுறை பூலோகநாதா் (நகரத்தாா் சிவன் கோயில்) சுவாமி திருக்கோயில் குடமுழுக்கையொட்டி, பாலாலய பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 6-ஆவது குடமுழுக்கு நடத்துவதற்கு விழாக் குழுவினரால் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், 11 சிவாச்சாரியா்கள் நடத்திய வாஸ்துசாந்தி, முதல் மற்றும் இரண்டாம் கால பூஜைகளுடன், விமான பால ஸ்தாபனம் எனப்படும் பாலாலயம் தொடங்கியது.

இப்பூஜையில் பொன்.புதுப்பட்டி நகர சிவன் கோயில் குடமுழுக்கு விழாக்
குழுத் தலைவா் ராம.பழனியப்பன், செயலா் ராம.ச. ராமசாமி, பொருளாளா் சுப.மு.சுப்பிரமணியன் மற்றும் விழாக்குழுவினா் பங்கேற்றனா்

பூஜைக்கான ஏற்பாடுகளை குடமுழுக்கு விழாக் குழுவினா் மற்றும் நகரத்தாா் பெருமக்கள் செய்திருந்தனா். தொடா்ந்து திருப்பணிகள் நடைபெற்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.