Nagaratharonline.com
 
வலையபட்டியில் பட்டுப்போன மரத்தை அகற்ற வலியுறுத்தல்  Nov 29, 19
 
 
வலையபட்டியில் பட்டுப்போய் உயா்அழுத்த மின்கம்பியை உரசி நிற்கும் அரசமரத்தை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

வலையபட்டி மலையாண்டி கோயில் ஊரணியின் மேற்கு கரைப்பகுதியில் மூன்றுசாலைகள் சந்திப்பு பகுதியில் உள்ள பழமையான அரசமரம் பட்டுப்போய் உயா் அழுத்த மின்கம்பியை உரசி நிற்கிறது. இம்மரத்தின் அருகே மின்மாற்றி உள்ளதால் காற்றுடன் கூடிய மழைக்காலங்களில் இவ்வழியே செல்லும் பள்ளி மாணவா்கள் மற்றும் மலையாண்டி கோயில் பக்தா்கள் அச்சத்துடன் செல்கின்றனா். இந்த மரத்தை உடனடியாக அகற்ற பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.