Nagaratharonline.com
 
திருப்புத்துாரில் ரோட்டோர புதர்களால் விபத்துq  Nov 21, 19
 
திருப்புத்துார் -- காரைக்குடி ரோட்டில் வைரவன்பட்டியிலிருந்து ரோட்டோரத்தில் புதர் அதிகரித்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.

திருப்புத்துாரிலிருந்து காரைக்குடி செல்லும் ரோட்டில் ஆன்மிகத் தலங்களான வைரவன்பட்டி பைரவர் கோயில், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில்,குன்றக்குடி முருகன் கோயில் உள்ளன.தற்போது விரத காலம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் ரோட்டில் விபத்துக்குள்ளாகும் வகையில் ரோட்டோரத்தில்களைச்செடிகள் அதிகரித்து ரோட்டை மறைத்து வருகின்றன. பாதசாரிகள், கால்நடைகள் ஒதுங்கி செல்ல வாய்ப்பில்லாமல் ரோட்டில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்து வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் அடுத்து பழநி பக்தர்கள் பாதயாத்திரை துவங்கி விடுவர் எனவே தற்போதே இந்த ரோட்டோரத்தில் உள்ள புதர்செடிகளை அகற்றி, கிராவல் மூலம் பலப்படுத்துவது போக்குவரத்துக்கு உதவும்.